தமிழ்மணம் முறையீடு

தமிழ்மணம் முறையீடு பதிவின் நோக்கம்

தமிழ்மணத்திற்கு நாளாந்தம் தமிழ்மணம் திரட்டும் பதிவுகளினதும் பின்னூட்டங்களினதும் உள்ளடக்கம், ஒலிப்பு, தரம் குறித்த கருத்துகள் வருகின்றன. இவற்றினையும் கருத்திலே எடுத்துக்கொண்டு தமிழ்மணம் தன் விதிகளுக்கு அமைய இயங்கவும் முடிவெடுக்கவும் செய்கின்றது. ஆனால், இம்முறை தமிழ்மணத்தின் செயற்பாடுகளை அதிகரிப்பதோடு நேரச்செலவினையும் உட்கொள்கிறது. மேலும் இது தமிழ்மணத்தின் முடிவுகள் குறித்த சந்தேகங்களையும் தமிழ்மணத்திற்கு ஒவ்வொரு பதிவு பற்றியும் தனிப்பட்ட கருத்துகள் இருப்பதுபோன்ற தோற்றத்தினையும் சில பதிவர்களுக்குத் தந்துவிடுவதாக தமிழ்மணம் நினைக்கிறது.

தமிழ்மணம் திரட்டும் பதிவுகளிலோ பின்னூட்டங்களிலோ தமிழ்மணத்துக்கு எந்தக்கருத்தளவிலான தலையீடுமில்லை. ஆனால், தமிழ்மணத்தின் விதிகளுக்கு அவை தகுந்தவையானால் மட்டுமே திரட்டுகிறது. மேலும் தமிழ்மணம் திரட்டும் ஒவ்வொரு பதிவினையும் கவனித்து, முடிவெடுக்க தமிழ்மணநிர்வாகத்துக்கு நேரக்கையிருப்பில்லை. அதனால், தமிழ்மணம் பதிவர்களையும் இச்செயற்பாட்டிலே வெளிப்படையாக இணைத்துக் கொள்ள விரும்புகிறது.

இச்சூழல் பற்றி தமிழ்மணம் அறிவிப்பு பதிவிலே இரு பதிவுகள் விரிவாகத் தரப்பட்டன. முடிந்தவரை பின்னூட்டங்களிலே விளக்கங்களும் கொடுக்கப்பட்டன.

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்
ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)

அப்பதிவுகளிலே குறித்த விதமாக, தமிழ்மணம் திரட்டும் பதிவுகளினதும் பின்னூட்டங்களினதும் உள்ளடக்கம், ஒலிப்பு, தரவு தொடர்நடவடிக்கையாக, தமிழ்மணத்திடம் வெளிப்படையாக முறையீடு செய்யும் வசதியை இப்பதிவு தரும்.

தமிழ்மணம் முறையீடு செயற்படும் வழிமுறையை அடுத்த பதிவு விளக்கமாகத் தரும்.